சீயக்காய் பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
தேவையானப் பொருள்கள்:
1. சீயக்காய் - 1 கிலோகிராம்
2. பாசிப்பயறு - 200 கிராம்
3. வெந்தயம் - 200 கிராம்
4. காய்ந்த செம்பருத்தி பூக்கள் - 200 கிராம்
5. காய்ந்த மருதாணி இலை - 200 கிராம்
6. காய்ந்த கறிவேப்பிலை இலை - 200 கிராம்
7. பூந்திக்கொட்டை - 200 கிராம்
8. வெட்டிவேர் - 200 கிராம்
9. மகிழம்பூ - 200 கிராம்
10. ஆவாரம் பூ - 200 கிராம்
11. பூலாங்கிழங்கு - 200 கிராம்
12. காய்ந்த நெல்லிக்காய் -200 கிராம்
செய்முறை:
- சீயக்காய், பூந்திக்கொட்டை, வெட்டிவேர், மகிழம்பூ, ஆவாரம் பூ, பூலாங்கிழங்கு இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- பூந்திக்கொட்டையில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும்.
- இவற்றையெல்லாம் வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும்.
- அனைத்துப் பொருள்களையும் மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
- தலைக்கு குளிக்கும் போது இந்த சீயக்காய் பொடியை தண்ணீரிலோ அல்லது சாதம் வடிக்கும் கஞ்சியிலோ கலந்து தேய்த்துவர தலைமுடி அடர்த்தியாக, நீளமாக வளரவும், மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்கவும் பயன்படுகிறது.
- உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment