- பாசி பயறு - 350கிராம்
- கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
- விரலி மஞ்சள் - 5
- நாட்டு ரோஜா இதழ்கள் - 100 கிராம்
- ஆவாரம் பூ - 100 கிராம்
- ஆரஞ்சுப் பழத்தோல் - 100 கிராம்
- வெட்டிவேர் - 100 கிராம்
- பூலாங்கிழங்கு - 100 கிராம்
- கோரைக்கிழங்கு - 100 கிராம்
- எலுமிச்சை தோல் - 5
- பூசு மஞ்சள் - 3
- தீருநீற்றுப் பச்சிலை - 100 கிராம்
செய்முறை:
- நாட்டு ரோஜா இதழ்கள்,ஆவாரம் பூ, திருநீற்றுப் பச்சிலை, ஆரஞ்சுப் பழத்தோல் மற்றும் எலுமிச்சை தோல் இவற்றை நன்றாக காய வைத்துக்கொள்ளவும்.
- கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், பூசு மஞ்சள், வெட்டிவேர், பூலாங்கிழங்கு மற்றும் கோரைக்கிழங்கு இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி வெயிலில் காய வைத்துக்கொள்ளவும்.
- பாசி பயறையும் வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.
- அனைத்துப் பொருள்களையும் மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
- இந்த பொடியை பால் அல்லது தயிர் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி வர, முகம் பொலிவு பெறும்.
- குளிக்கும் போது, சோப்பிற்கு பதில் இந்த பொடியை தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
பலன்கள்:
- சரும பிரச்சனை நீங்கவும்.
- முகத்தில் உள்ள பருக்கள் மறையவும்.
- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கவும்.
- தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, முகம் மற்றும் தோல் பொலிவு பெறுவதை உணரலாம்.
குறிப்பு:
- அனைத்து வயது பெண்களும் பயன்படுத்தலாம்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment