தேவையானப் பொருட்கள்:
- வெண்கடுகு
- நாய் கடுகு
- வலம்புரி
- இடம்புரி
- வெட்டி வேர்
- விலாமிச்சை வேர்
- அகில் கட்டை
- தேவதாரு பட்டை
- வேப்பிலை பொடி
- மருதாணி விதை
- ஆலங்குச்சி
- அரசங்குச்சி
- நன்னாரி
- நாவல்மரகுச்சி
- சடமாஞ்சில்
- வில்வ இலை பொடி
- அருகம்புல் பொடி
- கருப்பு குங்கிலியம்
- வெண் குங்கிலியம்
- பேய் மிரட்டி
- கட்டி சாம்பிராணி
- வலம்புரியும் மற்றும் இடம்புரியும் சேர்த்து 50 கிராம் எடுத்துக்கொள்ளவும்.
- மற்றப் பொருட்கள் ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை:
- கருப்பு குங்கிலியம் மற்றும் வெண் குங்கிலியம் இவை இரண்டையும் தனியாகப் பொடித்துக்கொள்ளவும். (கடைசியாக மற்ற பொருள்களுடன் சேர்த்துக்கொள்ளவும்).
- கட்டி சாம்பிராணியை தனியாகப் பொடித்துக்கொள்ளவும். இதனை நாம் சாம்பிராணி தூபம் போடும்போது சேர்த்துக்கொள்ளவும். ஏனென்றால், மற்றப் பொருள்களுடன் கலந்து வைக்கும் போது கட்டியாகிவிடும்.
- இப்பொழுது மற்றப் பொருள்களை பொடியாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடித்து வைத்துள்ள கருப்பு மற்றும் வெண் குங்கிலியம் பொடியையும் கலந்துக்கொள்ளவும்.
தூபம் போடும் முறை:
- கரித்துண்டு அல்லது தேங்காய் சிரட்டை கொண்டு நெருப்பு உண்டாக்கி, தூபக்காலில் போட்டு, நாம் தயாரித்து வைத்துள்ள மூலிகை பொடியும் மற்றும் சாம்பிராணியும் சிறிதளவு சேர்த்து, வீடு முழுவதும் தூபம் காட்டவும்.
பலன்கள்:
- லட்சுமி கடாட்சம் கிடைக்கவும்
- கண் திருஷ்டி நீங்கவும்
- தூக்கமின்மையைப் போக்கவும்
- விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கவும்
- எதிரிகளை விரட்டவும்
- தீய சக்திகள் வராமல் தடுக்கவும்.
சித்தர்கள் அருளிய இந்த மூலிகை சாம்பிராணி பயன்படுகிறது.
குறிப்பு:
- இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- கிடைத்தப் பொருள்களைப் பயன்படுத்தியும் மூலிகை சாம்பிராணி தயாரிக்கலாம்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment