நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய், அதன் பயன்கள் மற்றும் நெல்லிக்காய் ஜுஸ்

         " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற நியதிக்கு மாறாக, இவ்வுலகை இயக்குகிறது மனித இனம். நமது சுற்றுப்புறத்தில் உள்ள பல விதமான நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


       இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் "நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி." நெல்லிக்காய், அறுசுவைகளில் கரிப்புத்தன்மை தவிர மற்ற ஐந்து சுவைகளான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு உள்ள மருத்துவக்குணமிக்க ஒரு காய் அல்லது கனி ஆகும்.


நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்:

      வைட்டமின் 'சி', வைட்டமின் 'ஏ',கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாதுக்கள், அமினோ அமிலங்கள், 80% நீர்ச்சத்து அடங்கியுள்ளன.

நெல்லிக்காய் பயன்கள்:

  • நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரக்கூடிய அனைத்து வகையான சத்துக்களும்  நெல்லிக்காயில் உள்ளது.
  • நம்மையும், நமது உடல் உறுப்புகளையும் புத்துணர்வுடனும், என்றும் இளமையுடனும் வைத்திருக்கவும், சருமப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
  • நெல்லிக்காயை அடிக்கடி நமது உணவுப்பழக்க வழக்கத்தில் எடுத்துக்கொள்ளும் போது, இதயத்தில் ஏற்படும் அடைப்பு, இரத்தம் உறைதல் போன்றவைகளைத் தடுக்கிறது. மேலும் இதயம் தொடர்பானப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • முகம் பொலிவு பெறவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் நெல்லிக்காய் நல்ல பலனைத் தரும்.
  • நெல்லிக்காயில் அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், நமது உடலில் எலும்புகள் வலுவடைய, வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிடலாம்.
  • இன்றையக் காலக்கட்டத்தில் கலப்படமற்ற தரமான உணவு கிடைப்பது அரிதான ஒன்று. நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி நமது உடலுக்கு நன்மை செய்யும் உறுப்பு 'கல்லீரல்'. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும், அதன் வேலையை சிறப்பாக செய்யவும், கல்லீரலில் கிருமித் தொற்றால் ஏற்படும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் நெல்லிக்காய் உதவுகிறது. 
  • நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால், நமது இரத்ததில் உள்ள நச்சுக் கழிவுகளை வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
  • பித்தப்பைக் கற்கள், சிறுநீரக கற்கள் நீங்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
  • நெல்லிக்காய் சாப்பிடுவதால், வயிற்றுப் புண்கள், அஜீரணக் கோளாறுகள் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கலாம்.
  • நெல்லிக்காயில் உள்ள இரசாயனங்கள் புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுத்து, புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • நமது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளை அகற்றி, உடல் எடையைக் குறைக்க நெல்லிக்காய் சாப்பிடலாம்.
  • கண்பார்வை அதிகரிக்க, தெளிவு பெற நெல்லிக்காய் உதவுகிறது. 
நெல்லிக்காயை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?:
  • குழந்தைகளுக்கு, நெல்லிக்காயை சிறு சிறு மெல்லிய துண்டுகளாக நறுக்கி அதனை சிறிதளவு தேனில் ஊற வைத்துக் கொடுப்பதனால், அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தலாம்.
  • குழந்தைகளுக்கு, நெல்லிக்காய்களை நன்றாக துருவி, மாங்காய் சாதம், தேங்காய் சாதம் போல் நெல்லிக்காய் சாதம் செய்து தரலாம்.
  • நெல்லிக்காய் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கலாம்.
நெல்லிக்காய் சாறு(ஜுஸ்) செய்முறை:

தேவையானப் பொருட்கள்:
  1. நெல்லிக்காய் - 3
  2. சீரகம்  - 1/4 தேக்கரண்டி
  3. மிளகு  -  1/4 தேக்கரண்டி
  4. இஞ்சி - சிறு துண்டு (1/4)
  5. பச்சைமிளகாய் - சிறு துண்டு (1/4)
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. புதினா இலைகள் - சிறிதளவு

செய்முறை:
  • மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேவையென்றால் தேன் கலந்து பருகலாம்.


குறிப்பு:
  • நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடுவதனால், அதன் 10% பலனை மட்டும்தான் பெறமுடியும்.
  • நெல்லிக்காயை அப்படியே மென்று சாப்பிடும்போது அதன் முழுப்பலனைப் பெறலாம்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."


No comments:

Post a Comment