இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் "நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி." நெல்லிக்காய், அறுசுவைகளில் கரிப்புத்தன்மை தவிர மற்ற ஐந்து சுவைகளான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு உள்ள மருத்துவக்குணமிக்க ஒரு காய் அல்லது கனி ஆகும்.
நெல்லிக்காய் சாறு(ஜுஸ்) செய்முறை:
தேவையானப் பொருட்கள்:
- நெல்லிக்காய் - 3
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
- மிளகு - 1/4 தேக்கரண்டி
- இஞ்சி - சிறு துண்டு (1/4)
- பச்சைமிளகாய் - சிறு துண்டு (1/4)
- கறிவேப்பிலை - சிறிதளவு
- புதினா இலைகள் - சிறிதளவு
செய்முறை:
- மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேவையென்றால் தேன் கலந்து பருகலாம்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment