இளநரை முடி ஏற்படுவதற்கானக் காரணங்கள்:
மரபணுக்களின் மூலம் ஏற்படக்கூடிய இளநரை, வைட்டமின் B-12 குறைவு, தைராய்டு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு(Hormone imbalance), பிட்யூட்டரி சுரப்பி சரியாக செயல்படாமல் இருத்தல், அயோடின் குறைபாடு, இரத்தசோகை; புரதம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு, அதிகமான மனஉளைச்சல்(Tension), சரியான சரிவிகித உணவுமுறை இல்லாமை,ஹைட்ரஜன் ஃப்ராக்ஸைடு உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக வேதிப்பொருட்கள் கலந்த ஷாம்பு பயன்படுத்துவது; புகைப்பழக்கம், மதுப்பழக்கம்; துரித உணவுப்பழக்கம்(Junk food) இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நமக்கு இளநரை என்பது ஏற்படுகின்றது.
அதிகளவு அமோனியா போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்ற செயற்கை சாயங்கள்( Hair dye) நமக்கு பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
- தோலிற்கு ஒவ்வாமையை(skin Allergy) ஏற்படுத்துகிறது.
- கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
- தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
- சில ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார்கள்.
- கருந்துளசி பொடி
- கருவேப்பிலை பொடி
- மருதாணி பொடி
- நெல்லிக்காய் பொடி
- அவுரி பொடி
- செம்பருத்தி பொடி
- கடுக்காய் பொடி
- காபித்தூள் வடிநீர் (Coffee powder decoction) -- 3 தேக்கரண்டி
- ஒரு இரும்புப் பாத்திரத்தில் இப்பொடி வகைகளைச் சேர்த்து நன்றாக கலந்தபின், காபித்தூள் வடிநீரை சேர்த்து பசை போன்ற பதத்திற்கு தயாரித்து மூடி வைத்து, 12 மணிநேரம் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் தலையில் தடவி குறைந்தது 3 மணிநேரமாவது ஊறவிடவும்.
- இளம்சூடான வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
- இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தும் போது நாம் நல்லப் பலனைப் பெறலாம்.
- இளநரை கறுப்பாக மாறும்.
No comments:
Post a Comment