மூலிகை கசாயம் தயாரிப்பது எப்படி?

        நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பல சமூக தொற்றுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயற்கையைப் பேணுவதுதான் சிறந்த வழி.

மூலிகை கசாயம் தயாரிக்கத் தேவையானவை:
  • இஞ்சி  - ஒரு சிறியளவு துண்டு
  • கொத்தமல்லி - 1/2 தே.கரண்டி
  • நுணுக்கிய மிளகு  -  1/4 தே.கரண்டி
  • வெற்றிலை - 3 அல்லது 4

மூலிகை கசாயம் தயாரிப்பது எப்படி?

  • 100மிலி தண்ணீரில் இவற்றையெல்லாம் சேர்த்து கொதிக்க வைத்து 50மிலி அளவு சுண்ட காய்ச்சி, சிறிதளவு பனங்கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து, வடிகட்டி அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment