நமது பாரம்பரிய சமையல் முறையில் கறிவேப்பிலை நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. சமையலில் வாசனைக்காக கறிவேப்பிலை பயன்படுகிறது. ஆனால், மருத்துவ குணங்கள் நிறைந்த, காரம் கலந்த கசப்புத்தன்மைக் கொண்ட இந்த கறிவேப்பிலையை சிலர் சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகின்றனர்.
கறிவேப்பிலையின் பயன்கள்:
- இரத்தசோகையைக் குணப்படுத்தும்.
- சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
- வலுவான முடி வளர உதவுகிறது.
- வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவைக்கு உகந்தது.
- கண்பார்வைக்கு நல்லது.
- செரிமானத்திற்கு நல்லது.
கறிவேப்பிலைப் பொடி செய்முறை:
- கறிவேப்பிலையை நன்றாக நீரில் சுத்தம் செய்து, ஒரு துணியில், நிழலில் உலர்த்தி காய வைக்கவேண்டும்.
தேவையானப் பொருட்கள்:
- காய்ந்த கறிவேப்பிலை - 3 கைப்பிடி
- துவரம் பருப்பு - 1/4 கப்
- கடலைப் பருப்பு - 1/4 கப்
- உளுத்தம் பருப்பு - 1/4 கப்
- கொத்தமல்லி விதை(தனியா) - 1 மேஜை கரண்டி
- பொட்டுக்கடலை - 1 மேஜை கரண்டி
- சீரகம் - 1 தே. கரண்டி
- மிளகு - 1/2 தே. கரண்டி
- காய்ந்த மிளகாய் வற்றல் - 4 (காரத்திற்கேற்ப)
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - சிறிதளவு
செய்முறை:
- அனைத்துப் பொருட்களையும் மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
- சூடு ஆறிய பின் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
- சூடான சாதத்துடன், நெய் மற்றும் இப்பொடியை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- இட்லி, தோசைக்கு பயன்படுத்தலாம்.
குறிப்பு:
- தேவையென்றால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment