சீயக்காய் பொடி

சீயக்காய் பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

தேவையானப் பொருள்கள்:

1. சீயக்காய் - 1 கிலோகிராம்

2. பாசிப்பயறு   - 200 கிராம்

3. வெந்தயம்    - 200 கிராம்

4. காய்ந்த செம்பருத்தி பூக்கள் - 200 கிராம்                                                          
5. காய்ந்த மருதாணி இலை - 200 கிராம்                                                               
6. காய்ந்த கறிவேப்பிலை இலை -   200 கிராம்    
                                            
7. பூந்திக்கொட்டை   - 200 கிராம்

8. வெட்டிவேர்     - 200 கிராம்

9. மகிழம்பூ          - 200 கிராம்

10. ஆவாரம் பூ   - 200 கிராம்

11. பூலாங்கிழங்கு       - 200 கிராம்

12. காய்ந்த நெல்லிக்காய் -200 கிராம்     
                                 
செய்முறை:
  • சீயக்காய், பூந்திக்கொட்டை, வெட்டிவேர், மகிழம்பூ, ஆவாரம் பூ, பூலாங்கிழங்கு இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
  • பூந்திக்கொட்டையில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும். 
  • இவற்றையெல்லாம் வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும்.
  • அனைத்துப் பொருள்களையும் மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
  • தலைக்கு குளிக்கும் போது இந்த சீயக்காய் பொடியை தண்ணீரிலோ அல்லது சாதம் வடிக்கும் கஞ்சியிலோ கலந்து தேய்த்துவர தலைமுடி அடர்த்தியாக, நீளமாக வளரவும், மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்கவும் பயன்படுகிறது.
  • உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."


No comments:

Post a Comment