இன்றைய இயந்திர வாழ்வில் நமது ஆரோக்கியத்தைக் காப்பது அவசியமான ஒன்றாகும். நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பல சமூக தொற்றுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயற்கையைப் பேணுவதுதான் சிறந்த வழி.
அத்தகைய இயற்கை நமக்கு ஏராளமான மூலிகைகளை கொடையாக அளித்துள்ளது.
இந்த மூலிகைகளில் சிலவற்றைப் பயன்படுத்தி மூலிகை தேநீர் தயாரிக்கும் முறையை இந்த வலைப்பதிவில் காண்போம்.
மூலிகை தேநீர் தயாரிக்கத் தேவையானவை:
- சுக்கு
- மிளகு
- திப்பிலி
- அதிமதுரம்
- நன்னாரி
- சித்தரத்தை
- ஓமம்
- கருஞ்சீரகம்
- ஏலக்காய்
- கொத்தமல்லி (விதைகள்)
- இலவங்கம்
- ஆவாரம்பூ
- நாட்டு ரோஜா மொக்கு (இதழ்கள்)
மூலிகை தேநீர் பொடி தயாரிக்கும் முறை:
- மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நன்றாக காய வைத்து உலர்த்தி பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை:
- ஒரு டம்ளர் தண்ணீரில் (200மிலி), 1/2 தே.கரண்டி இந்த மூலிகை தேநீர் பொடி மற்றும் பனங்கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்கவிடவும்
- கொதித்தப்பின் அதனை வடிகட்டி அருந்தலாம்.
மூலிகை தேநீர் நன்மைகள்:
- உடல் வலி , நெஞ்சு சளி, இருமல், தும்மல் போன்றவைக் குறைய உதவுகிறது.
- உடலில் தேக்கமான கழிவுகளை நீக்க, கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
- நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது.
- புத்துணர்வும், சுறுசுறுப்பும் தருகிறது.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
Very useful information ...
ReplyDelete