பிரண்டை துவையல் செய்முறை:
தேவையானப் பொருள்கள்:
- பிரண்டை - 1 கட்டு
- உளுந்து பருப்பு - 1 மேஜைக் கரண்டி
- கடலைப் பருப்பு - 1 மேஜைக் கரண்டி
- மிளகாய் வற்றல் - 3 (காரத்திற்கேற்ப)
- சின்ன வெங்காயம் - 7
- பூண்டு - 3 பல்கள்
- புளி - சிறிதளவு
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
- உப்பு
- நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
தாளிக்க தேவையானப் பொருட்கள்:
பிரண்டை துவையல் செய்முறை:
- பிரண்டையை தோல் நீக்கி; நார் அகற்றி; சுத்தம் செய்து; சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். (பிரண்டையின் சாறு அரிப்பையும், நமைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், சுத்தம் செய்யும்முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்).
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, புளி, பிரண்டை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- சூடாறியபின் இவற்றை அரைத்து, தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
- சூடான சாதத்துடன், நெய் மற்றும் பிரண்டை துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் பிரண்டையைப் பயன்படுத்தி பிரண்டைத் தொக்கு; பிரண்டை இரசம்; பிரண்டை காரக்கொழம்பு ; பிரண்டைப் பொடி செய்யலாம்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."