இளநரை முடி கறுப்பாக மாற 'இயற்கை முடிச்சாயம்( Natural Hair Dye) தயாரிப்பது எப்படி?

இளநரை முடி ஏற்படுவதற்கானக் காரணங்கள்:

         மரபணுக்களின் மூலம் ஏற்படக்கூடிய இளநரை, வைட்டமின் B-12 குறைவு, தைராய்டு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு(Hormone imbalance), பிட்யூட்டரி சுரப்பி சரியாக செயல்படாமல் இருத்தல்,  அயோடின் குறைபாடு, இரத்தசோகை; புரதம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு, அதிகமான மனஉளைச்சல்(Tension), சரியான சரிவிகித உணவுமுறை இல்லாமை,ஹைட்ரஜன் ஃப்ராக்ஸைடு உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக வேதிப்பொருட்கள்  கலந்த ஷாம்பு பயன்படுத்துவது; புகைப்பழக்கம், மதுப்பழக்கம்; துரித உணவுப்பழக்கம்(Junk food) இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நமக்கு இளநரை என்பது ஏற்படுகின்றது.

அதிகளவு அமோனியா போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்ற செயற்கை சாயங்கள்( Hair dye) நமக்கு பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

  1. தோலிற்கு ஒவ்வாமையை(skin Allergy)        ஏற்படுத்துகிறது. 
  2. கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
  3. தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
  4. சில ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார்கள்.
இதுபோன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்விதமான செயற்கை சாயங்கள்( Hair dye) நமக்கு தேவையா?

இயற்கை முடிச்சாயம் தயாரிப்பது எப்படி?

தேவையானப் பொருட்கள்:
  • கருந்துளசி பொடி
  • கருவேப்பிலை பொடி
  • மருதாணி பொடி
  • நெல்லிக்காய் பொடி
  • அவுரி பொடி
  • செம்பருத்தி பொடி
  • கடுக்காய் பொடி
  • காபித்தூள் வடிநீர் (Coffee powder decoction) -- 3 தேக்கரண்டி 

செய்முறை:
  • ஒரு இரும்புப் பாத்திரத்தில் இப்பொடி வகைகளைச் சேர்த்து நன்றாக கலந்தபின், காபித்தூள் வடிநீரை சேர்த்து பசை போன்ற பதத்திற்கு தயாரித்து மூடி வைத்து, 12 மணிநேரம் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் தலையில் தடவி குறைந்தது 3 மணிநேரமாவது ஊறவிடவும்.
  • இளம்சூடான வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
  • இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தும் போது நாம் நல்லப் பலனைப் பெறலாம்.
  • இளநரை கறுப்பாக மாறும்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி ஜுஸ்

        இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் "நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி." நெல்லிக்காய், அறுசுவைகளில் கரிப்புத்தன்மை தவிர மற்ற ஐந்து சுவைகளான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு உள்ள மருத்துவக்குணமிக்க ஒரு காய் அல்லது கனி ஆகும்.


 நெல்லிக்காய் சாறு(ஜுஸ்) செய்முறை:


தேவையானப் பொருட்கள்:
  1. நெல்லிக்காய் - 3
  2. சீரகம்  - 1/4 தேக்கரண்டி
  3. மிளகு  -  1/4 தேக்கரண்டி
  4. இஞ்சி - சிறு துண்டு (1/4)
  5. பச்சைமிளகாய் - சிறு துண்டு (1/4)
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. புதினா இலைகள் - சிறிதளவு

செய்முறை:
  • மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேவையென்றால் தேன் கலந்து பருகலாம்.


     
     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய், அதன் பயன்கள் மற்றும் நெல்லிக்காய் ஜுஸ்

         " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற நியதிக்கு மாறாக, இவ்வுலகை இயக்குகிறது மனித இனம். நமது சுற்றுப்புறத்தில் உள்ள பல விதமான நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


       இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் "நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி." நெல்லிக்காய், அறுசுவைகளில் கரிப்புத்தன்மை தவிர மற்ற ஐந்து சுவைகளான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு உள்ள மருத்துவக்குணமிக்க ஒரு காய் அல்லது கனி ஆகும்.


நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்:

      வைட்டமின் 'சி', வைட்டமின் 'ஏ',கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாதுக்கள், அமினோ அமிலங்கள், 80% நீர்ச்சத்து அடங்கியுள்ளன.

நெல்லிக்காய் பயன்கள்:

  • நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரக்கூடிய அனைத்து வகையான சத்துக்களும்  நெல்லிக்காயில் உள்ளது.
  • நம்மையும், நமது உடல் உறுப்புகளையும் புத்துணர்வுடனும், என்றும் இளமையுடனும் வைத்திருக்கவும், சருமப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
  • நெல்லிக்காயை அடிக்கடி நமது உணவுப்பழக்க வழக்கத்தில் எடுத்துக்கொள்ளும் போது, இதயத்தில் ஏற்படும் அடைப்பு, இரத்தம் உறைதல் போன்றவைகளைத் தடுக்கிறது. மேலும் இதயம் தொடர்பானப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • முகம் பொலிவு பெறவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் நெல்லிக்காய் நல்ல பலனைத் தரும்.
  • நெல்லிக்காயில் அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், நமது உடலில் எலும்புகள் வலுவடைய, வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிடலாம்.
  • இன்றையக் காலக்கட்டத்தில் கலப்படமற்ற தரமான உணவு கிடைப்பது அரிதான ஒன்று. நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி நமது உடலுக்கு நன்மை செய்யும் உறுப்பு 'கல்லீரல்'. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும், அதன் வேலையை சிறப்பாக செய்யவும், கல்லீரலில் கிருமித் தொற்றால் ஏற்படும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் நெல்லிக்காய் உதவுகிறது. 
  • நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால், நமது இரத்ததில் உள்ள நச்சுக் கழிவுகளை வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
  • பித்தப்பைக் கற்கள், சிறுநீரக கற்கள் நீங்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
  • நெல்லிக்காய் சாப்பிடுவதால், வயிற்றுப் புண்கள், அஜீரணக் கோளாறுகள் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கலாம்.
  • நெல்லிக்காயில் உள்ள இரசாயனங்கள் புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுத்து, புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • நமது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளை அகற்றி, உடல் எடையைக் குறைக்க நெல்லிக்காய் சாப்பிடலாம்.
  • கண்பார்வை அதிகரிக்க, தெளிவு பெற நெல்லிக்காய் உதவுகிறது. 
நெல்லிக்காயை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?:
  • குழந்தைகளுக்கு, நெல்லிக்காயை சிறு சிறு மெல்லிய துண்டுகளாக நறுக்கி அதனை சிறிதளவு தேனில் ஊற வைத்துக் கொடுப்பதனால், அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தலாம்.
  • குழந்தைகளுக்கு, நெல்லிக்காய்களை நன்றாக துருவி, மாங்காய் சாதம், தேங்காய் சாதம் போல் நெல்லிக்காய் சாதம் செய்து தரலாம்.
  • நெல்லிக்காய் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கலாம்.
நெல்லிக்காய் சாறு(ஜுஸ்) செய்முறை:

தேவையானப் பொருட்கள்:
  1. நெல்லிக்காய் - 3
  2. சீரகம்  - 1/4 தேக்கரண்டி
  3. மிளகு  -  1/4 தேக்கரண்டி
  4. இஞ்சி - சிறு துண்டு (1/4)
  5. பச்சைமிளகாய் - சிறு துண்டு (1/4)
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. புதினா இலைகள் - சிறிதளவு

செய்முறை:
  • மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேவையென்றால் தேன் கலந்து பருகலாம்.


குறிப்பு:
  • நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடுவதனால், அதன் 10% பலனை மட்டும்தான் பெறமுடியும்.
  • நெல்லிக்காயை அப்படியே மென்று சாப்பிடும்போது அதன் முழுப்பலனைப் பெறலாம்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."


சத்துக்கள் நிறைந்த முருங்கை இலைத் தண்டுப்பகுதி சூப்

        முருங்கை மரத்தின் இலை, தண்டு, பூக்கள், காய், வேர், பட்டை அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளது.

இந்த வலைப்பதிவில் முருங்கை கீரையின் தண்டினைப் பயன்படுத்தி சூப் செய்வதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.


முருங்கை  தண்டு
முருங்கை இலை(கீீரை)

  • முருங்கை இலையை ஆய்ந்தபின் அதன் தண்டுப் பகுதியை வீணாக்காமல், அதில் சூப் செய்து பருகலாம். ஏனென்றால் அவற்றிலும் சத்துக்கள் உள்ளன.

முருங்கை தண்டு சூப்

  • முருங்கை தண்டினை சுத்தம் செய்து ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு தண்ணீீர் சேர்த்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஒன்று, சிறிதளவு சீீீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து, அந்த நீீரினை வடித்துக் குடிக்கலாம்.



     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

Healthy Betel Leaves rice preparation

 

Betel leaves have much more health benefits but sadly, modern urban people are not only unaware of its medicinal  benefits and then discourage eating these leaves citing alleged risk of oral cancer. Actually the concerns regarding oral cancer are caused of tobacco and other ingredients like areca nut, slaked lime.


HOW TO PREPARE BETEL LEAF RICE:


INGREDIENTS:
  • Betel leaves       - 5 to 10 nos
  • Pepper                - 1 tb. Spoon
  • Cumin seeds      -1 tb. Spoon
  • Garlic                  - 5 to 7 cloves
  • Small onion       - 5 to 10
  • Peanuts               - 1 handful
  • Urad dal         - 1/2 tea spoon
  • Mustard seeds - 1/2 tea spoon
  • Curry leaves     - 1 strand
  • Coconut           - 1 cup
  • Cooked rice     - 2 and 1/2 cup
  • Oil                  - 2 tb. Spoon   
  • Turmeric powder - 1/4 tea spoon
  • Dried red chilly     - 3 nos
  • Salt                  - salt as needed

METHOD:
  • Remove the stalks of betel leaves and wash them.
  • Chop the onion and garlic finely.
  • Take a kadaai, add pepper, cumin seeds, chopped betel leaves and add 1/2 cup of  grated coconut, then satue well in low medium flame and grind it together finely.
  • Then take a kadaai, pour oil, add mustard seeds, urad dal, curry leaves, chopped onion and garlic, peanuts, turmeric powder, red chilly and saute them finely.
  • Then add remaining 1/2 cup of coconut, roast well and add that grinded paste, add required amount of salt, saute well.
  • Add boiled(cooked) rice and mix well and turn off the stove. 
  • Now you can serve the hot and healthy, yummy betel leaf rice.

சளி தொந்தரவு நீக்கும் தூதுவளை பயன்கள், தூதுவளை ரசம் செய்முறை மற்றும் தூதுவளை துவையல்

      கற்பக மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இந்த கொடி வகை தாவரம், ஈரம் நிறைந்த செழிப்பான இடங்களில், வேலிகள் அல்லது மற்ற செடிகளைப் பற்றி படர்ந்து, புதர் போல வளரும் தாவரமாகும். இத்தாவரத்தில், சிறு சிறு வளைந்த முட்கள், கரும்பச்சை நிற இலைகள், ஊதா நிறப் பூக்கள், உருண்டை வடிவத்தில் சிவப்பு நிற பழங்கள் காணப்படும்.


          இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, அளர்க்கம், சிங்கவல்லி என பல பெயர்கள் உள்ளது. இலை, பூ, காய், கனி, வேர் என இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியும் மருத்துவப் பயன்கள் கொண்டது. தூதுவளையைப் பயன்படுத்தும் முன்பே, இதன் முட்களை நீக்க வேண்டியது அவசியமானதாகும். ஏனென்றால் முட்கள் இருக்கும் செடிகள் சற்று நச்சுத் தன்மை கொண்டவையாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட தூதுவளைத் தாவரம்,  ஓர் காய கற்பக மூலிகையாகும்.

தூதுவளைப் பயன்கள்:
  • தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவில் உள்ளதால் எலும்பையும், பற்களையும் வலுப்படுத்தும்.
  • தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி, காலை மற்றும் மாலை என இரு வேளையும் சிறிதளவு தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டுவர, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதுடன், இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுப்பெறும்.
  • தூதுவளையை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டுவர வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தலாம்.
  • தூதுவளை மூளையில் உள்ள செல்களைத் தூண்டி நினைவாற்றல் பெருக உதவுகிறது.
  • சளி, இருமல், இரைப்பு, சுவாச நோய்கள் நீங்க தூதுவளை நல்ல மருந்தாகும்.
  • தூதுவளை பொடியயை மோரில் கலந்து சாப்பிட , இரத்த சோகை நீங்கி, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகமாகும்.
  • தூதுவளை பொடியயை பாலில் கலந்து சாப்பிட, பித்தத்தால் ஏற்படும் தலைவலி, மயக்கம் போன்றவைக்கு தீர்வு காணலாம்.
தூதுவளை ரசம்:
      சளி,  இருமல் நீங்க தூதுவளை ரசம் நல்ல மருந்தாகும்.

தேவையானப் பொருட்கள்:
  • தூதுவளை  - 30 இலைகள்
  • மிளகு    - 1 தேக்கரண்டி
  • சீரகம்    -  1 தேக்கரண்டி
  • பூண்டு - 5 பல்கள்
  • மிளகாய் வற்றல்   - 3
  • கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
  • கறிவேப்பிலை  - ஒரு கொத்து 
  • புளி    - பெரிய நெல்லிக்காய் அளவு
  • தக்காளி  - 1(தேவைப்பட்டால்)
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்   - சிறிதளவு
  • பெருங்காயம்  - சிறிதளவு      
தூதுவளை ரசம் செய்முறை:
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு, பூண்டு, தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும், பின் இதனை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தூதுவளை விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
  • ரசம் கொதித்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.


தூதுவளை துவையல்:
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கொத்தமல்லி, உளுந்து, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
  • பின் நன்கு சுத்தம் செய்த தூதுளை இலைகள் சேர்த்து வதக்கவும்.
  • இதனை அரைத்து சூடான சாதத்துடன், தூதுவளை துவையல் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிலாம்.

தூதுவளையைப் பயன்படுத்தி தோசை, அடை தோசை செய்யலாம்.


     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."