சளியை விரட்டும் வெற்றிலை சாதம்

வெற்றிலை சாதம் (Betel leaves rice)

தேவையானப் பொருள்கள்:
 
1. வெற்றிலை  - 5 முதல் 10 

2. மிளகு     - 1 தே.கரண்டி

3. சீரகம்     -  2 தே. கரண்டி

4. பூண்டு   - 5 முதல் 7 பல்கள்

5. சின்ன வெங்காயம் - 5 முதல் 10            
                              
6.வேர்க்கடலை  - சிறிதளவு

7.கடலைப்பருப்பு- சிறிதளவு

8. உளுந்து        - சிறிதளவு

9. கடுகு         - 1/2 தே. கரண்டி

10. கறிவேப்பிலை  - சிறிதளவு

11. தேங்காய் துருவல் - 1 கப்

12. வேக வைத்த சாதம்  - 2 1/2 கப்

13. நல்லெண்ணெய்      - 1 மேஜை கரண்டி

14. மஞ்சள் தூள்      - 1/4 தே.கரண்டி

15. காய்ந்த மிளகாய்      - 3 வற்றல்

16. உப்பு           - தேவையான அளவு

  • வெற்றிலையின் காம்பு பகுதியை நீக்கி சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைக்க தேவையானப் பொருட்கள்:
( மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களிலிருந்து)
  •  கடாயில் மிளகு, சீரகம், வெற்றிலை,     1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து  மிதமான தீயில் வறுத்து, நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வேர்க்கடலை சேர்க்கவும். (முந்திரி)
  • மீதமுள்ள தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
  • அரைத்தக்  கலவையை சேர்த்து நன்கு வதங்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சூடான, சுவையான, சத்தான வெற்றிலை சாதம் தயார்.
பலன்கள்:
  • அஜீரணக்கோளாறை நீக்கும்.
  • நெஞ்சு சளியை விரட்டும்.
குறிப்பு:
  • வெற்றிலையும் காரம் என்பதால், குழந்தைகளுக்கு செய்யும் போது தேவைக்கு ஏற்ப காரத்தைக் குறைத்துக்கொள்ளவும்.

    "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

Healthy and Herbal Hair Oil

      In now a day, Everyone wants to live healthy life and chemical free life in our society. But is it possible for us? 

    I know, making this herbal and healthy hair oil at home is not so easy as just grabbing one hair oil  bottle in the supermarket.

INGREDIENTS:

1. Bhringraj plant leaves  -  3 cup

2. Henna leaves              - 1 cup

3. Hibiscus leaves          - 2 cup

4. Hibiscus Flowers- 5 to 10 nos

5. Neem leaves   - 1 cup

6. Guava tree leaves  - 1 cup

7. Curry leave    - 1 cup

8. Small Onion  - 10 nos

9. Goose berry(amla)    - 5 nos

10. Fenugreek seeds (soaked)-25 to 50 gram                                            
11. Almonds (soaked)    - 5 nos

12. Coconut oil         - 1 litre

13. Castor oil       - 25 milli litre

14. Aloevera jel   - 1 small cup


Preparation:
  • Makes sure all these ingredients are washed and Grind all these together thoroughly.
  • Heat coconut and castor oil preferably  in an iron kadai on low-medium flame. 
  • When it is hot, add that grinded paste and stir it well with a dry ladle. 
  • Simmer for 30 - 45 minutes until infused  while stirring intermittently. 
  • The oil will turn olive-green. Then remove from heat and let it allow to cool.
  •  Strain into a clean dry bottle once cooled.
  •  The remnant solids can added to plain coconut oil to infuse and used later.
  •  Store it in the airtight bottle in cool, dry spot.

How to use:
  • Apply to the scalp using your fingertips in circular massaging motion.
  • Let it soak for an hour or overnight,then wash your hair.
  • Use regularly.

Benefits:
  • It is very useful remedy for grey hair, hair fall, hair growth.   







தலைமுடி அடர்த்தியாக வளர இயற்கை வழிமுறை



தேவையானப் பொருள்கள்:

1. கரிசலாங்கண்ணி - 3 கைப்பிடி

2. மருதாணி        - 1 கைப்பிடி

3.செம்பருத்தி இலை   - 2 கைப்பிடி

4. செம்பருத்தி பூக்கள்  - 5                            முதல்  10 பூக்கள்

5. வேப்பிலை     - 1 கைப்பிடி

6. கொய்யா இலை  - 1  கைப்பிடி

7. கறிவேப்பிலை  - 1                                                    கைப்பிடி

8. சின்ன வெங்காயம்   
  - 10

9. பெரிய நெல்லிக்காய்  - 5

10.வெந்தயம்(ஊற வைத்தது) -25                                              முதல் 50 கிராம்

11. பாதாம்(ஊற வைத்தது)                                                 - 5

12. தேங்காய் எண்ணெய் - 1                                        லிட்டர்

13. விளக்கெண்ணெய் - 25                               மில்லி லிட்டர்   

14. கற்றாழை - 2 அல்லது 3                             துண்டு (ஜெல்)


செய்முறை:
  •  அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை ஊற்றி 10 நிமிடம் சூடேற்றவும் பின்பு அரைத்தக் கலவையை சேர்த்து மிதமான தீயில் 45 நிமிடம் கொதிக்க விடவும்                      (கருகிவிடாமலிருக்க இடை இடையே கிளறி விட வேண்டும்). பின்னர் சூடு ஆறியதும் நன்கு வடிகட்டி சேகரித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் தேவைப்பட்டால் இதனுடன் 500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்துக்கொள்ளலாம். 

உபயோகிக்கும் முறை:
  •  தினமும் தலையில் தேய்த்துக் கொள்ளலாம் அல்லது வாரம் இரண்டு, மூன்று முறைப் பயன்படுத்தலாம்.

பலன்கள்:
  •  அடர்த்தியான தலைமுடி  வளரவும், இளநிரை நீங்கவும், வழுக்கையான இடத்தில் முடி வளரவும், தலைமுடி  உதிர்வதைத் தடுக்கவும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இந்த ஆரோக்கியமான எண்ணெய் பயன்படுகிறது. 

குறிப்பு:
  • கிடைத்தப் பொருட்களைப் பயன்டுத்தியும் செய்யலாம்.

   "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."







        

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

முன்னுரை :
             அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர்.

பொருளுரை:
 பிறப்பு:     

             திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை. அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்தார். அவர் ஆதி – பகவன் என்பவருக்கு மகனாகப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். 

மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.

     காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் தனது புதல்வியான வாசுகியயை வள்ளுவருக்கு திருமணம் முடித்ததாக கூறப்படுகிறது.

சிறப்புப்பெயர்கள்:

திருவள்ளுவர் பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்படுகிறார். அவை:

  • தேவர்
  • நாயனார்,
  • தெய்வப்புலவர்,
  • செந்நாப்போதர்,
  • பெருநாவலர்,
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர்
  • மாதானுபங்கி
  • முதற்பாவலர்

சிறப்பு:
    புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக, தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டு பொங்கல் தினத்தன்று திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது.

புலவர்களின் பாராட்டுகள்:

      பல புலவர்கள் இணைந்து தொகுத்த, 

திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.

இவரை,

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என பாரதியாரும்

"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

திருக்குறள்:

          பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை', திருவள்ளுவம்’,  ‘ஈரடி நூல்’  பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

        திருக்குறள், மனிதர்கள் தம் அக, புற வாழ்வில் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழ தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

நூற்பிரிவு:

 இயல் - 9

அதிகாரம்-133

குறள்  - 1330

அறத்துப்பால்:

திருக்குறளின்  முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன. 4 அதிகாரங்கள் பாயிரவியலிலும், 20 அதிகாரங்கள் இல்லறவியலிலும்,13 அதிகாரங்கள் துறவறவியலிலும்,  இறுதியாக ஊழியலில் ஒரு அதிகாரமும் என வகைபடுத்தப்பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. 

பொருட்பால்:   

            அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய மூன்று இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்களும், அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

இன்பத்துப்பால்:

கடைசிப்பாலாகிய இன்பத்து அல்லது காமத்துப்பாலில் களவியல், கற்பியல் என இரண்டு இயல்கள் உள்ளன. 
களவியலில் 7 அதிகாரங்களும்,கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.

நினைவுச்சின்னம்:

                   இந்தியாவின் தென் கோடியில், முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதனை வடிவமைத்த "சிற்பி கணேசன்அவர்கள் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடையது.

        1960இல் திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

முடிவுரை:  

                   தன்னுடைய சிந்தனைத் திறத்தால், அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகவும், தமிழர்களுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளது என்றும் சொன்னால் அது மிகையாகாது. 




       
















சிறுதானியங்களும், நன்மைகளும்.


சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம். 
வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்துகொள்ளுங்கள்...

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது. பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு, வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து விட்டது. இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக மறந்து விட்டனர்.

உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.

சிறுதானியங்கள் என்றால் என்ன?

உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை. மேலும் சிறுதானியங்கள், மிகவும் பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாகவும், தானிய வகைகளில் முதன்மையானதாகவும் உள்ளது.

சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நிலத்தில் விதையைத் தூவியதிலிருந்து, குறைந்தது 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். இது அவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. இத்தன்மை மக்கள் தொகை அதிகமுள்ள நிலப்பகுதிகளில் பயனளிக்கக் கூடியது. சிறுதானியங்களை, சரியான முறையில் சேமித்து வைக்கும் பொழுது, அவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?

ஊட்டச்சத்துக்கள்: இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவற்றில், வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. பட்டைதீட்டப்பட்ட அரிசியைப் போல் அல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது.



சிறுதானியங்களை யார் சாப்பிடலாம்?

சிறுதானியங்களை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

சிறுதானியத்தை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

சிறுதானியங்களை சாதமாக சமைக்கும் முன்னர், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். சாதம் நன்கு குழைவாக வேண்டும் எனில், குக்கரில் சமைக்கவும். உதிரியாக வேண்டுமெனில், பாத்திரத்தில் சமைக்கவும். வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை முதலிய தானியங்களை சமைக்க, அவற்றின் அளவைப் போன்று 2 1/4 முதல் 2 1/2 மடங்கு நீர் தேவைப்படும். குக்கரில் சமைக்க 8 நிமிடங்களும், பாத்திரம் எனில் 10 நிமிடங்களும் ஆகும்.

கம்பு மற்றும் சோளத்தில் சாதம் செய்ய, குறைந்த பட்சம் 15 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். சமைப்பதற்கு 3 முதல் 4 மடங்கு வரை தண்ணீர் தேவைப்படும். சாதம் குக்கரில் வேக 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும். பாத்திரம் எனில், 40 அல்லது 45 நிமிடங்கள் ஆகும்.

மற்ற உணவு வகைகளான, ரொட்டி, இடியாப்பம், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை, சிறுதானிய மாவில் தயாரிப்பதனால், சமைக்க அதிக நேரம் தேவைப்படாது.

திணை:
https://twinbuds.blogspot.com
திணை


உலகிலேயே அதிகம்  2வது தானியம் . பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. கண்பார்வைக்கு நல்லது. தாய்பால் சுரக்க உதவும். கபம் தொடர்பான நோய்க்கு நல்லது. வாயுத்தொல்லையை விரட்டும். இதில் தினை மாவு, முறுக்கு, அல்வா, புட்டு, பொங்கல், லட்டு, இட்லி, காரப்பணியாரம். பாயசம், அதிரசம் செய்யலாம்.

சாமை:
https://twinbuds.blogspot.com
சாமை

புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. இது மலச்சிக்கலைப் போக்க வல்லது. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி, புட்டு, கிச்சடி செய்து சாப்பிடலாம்.


குதிரைவாலி:
https://twinbuds.blogspot.com

சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர். உடலை சீராக வைக்க உதவுகிறது. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது. ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. குதிரை வாலியில் முறுக்கு, சோறு, தோசை,  உப்புமா, கிச்சடி உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

சோளம்:

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் தொடர்பான நோய்கள், சொரியாசிஸ், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் ஏற்றதல்ல. சர்க்கரைநோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்னை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சிறந்தது. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது. சோறு, தோசை, அல்வா, வடை, பாயசம், அடை, பணியாரம் தயாரிக்கலாம்.

கம்பு:
அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும்  தன்மை கம்புக்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு.  கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.

வரகு:
வரகு

வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு.  சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.  

கேழ்வரகு:
உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன. பாலில்  உள்ள கால்சியத்தை   விட  இதில் அதிகம் உள்ளன. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய்  எதிர்ப்பு சத்தியை  அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும்.

பனிவரகு: 
பனிவரகு ஒரு புன்செய் தானியம். சிறுதானியங்களில் குறைந்த காலத்தில் விளைவது இதுதான். குளிர் காலங்களில் அதிகாலையில் பொழியும் பனியின் ஈரப்பதமே இதற்குப் போதும். அதனால்தான் இதற்கு பனிவரகு என்ற பெயர். 
நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பனியாரம் செய்து சாப்பிடலாம்.

    "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."





NUTS POWDER FOR KIDS (Health Mix Drink)

         பல சத்துக்கள் நிறைந்த இந்த உலர்ந்த விதைகள் (Dry Nuts) குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகிறது. குழந்தைகளின் எடையை அதிகரிக்கவும், அவர்களை வலுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.


சத்தான ஆரோக்கியப் பொடி செய்ய தேவையானப் பொருட்கள்:

1. முந்திரி பருப்பு  -   1 Cup

2. பாதாம் பருப்பு   -   1 Cup

3. வேர்கடலை        -   1 Cup

4. பிஸ்தா பருப்பு   -   1 Cup    

5. பூசணி விதைகள் (Pumpkin seeds)
                                       -   1 Cup

6. வால்நட்                 -   1/2 Cup

7. ஏலக்காய்             - 1/2 spoon ( 2 or 3 )

செய்முறை :
  • இவற்றையெல்லாம் மிதமான தீயில் வறுத்து, நன்கு ஆற வைத்தப் பின்பு  கொர கொரப்பான பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ளவும். (ஏனென்றால் அனைத்திலும் எண்ணெய் சத்து உள்ளது).

பயன்படுத்தும் முறை:
  • ஒரு டம்ளர் பாலைக் காய்ச்சி, அதில் ஒரு தே.கரண்டி இந்த பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்க வேண்டும்.
  • பிறகு பாலை  வடிகட்டி, இந்த சுவையான ஆரோக்கிய பாலை(health mix drink) அருந்தலாம்.

    குறிப்பு:
    • குழந்தை பிறந்து 8 மாதத்திற்கு பிறகு இதனைத் தயாரித்து கொடுக்கலாம்.
    • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

    குழந்தைகளுக்கான சத்து மாவு செய்ய தேவையானப் பொருட்கள் மற்றும் கஞ்சி செய்முறை

            பல தானியங்களின் சத்துக்கள் நிறைந்த இந்த சத்து மாவு, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகிறது. குழந்தைகளின் எடையை அதிகரிக்கவும், அவர்களை வலுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த சத்து மாவைப் பயன்படுத்தி கஞ்சியாகவோ, சத்து மாவு உருண்டைகளாகவோ (ladoo) அல்லது தோசையாகவோ செய்து குழந்தைகளுக்குக் கொடுக்காலாம்.




    சத்து மாவு செய்ய தேவையானப் பொருட்கள்

    1. சம்பா கோதுமை - 1/4
    கிலோ கிராம்
    2. கேழ்வரகு          - 1/4 கிலோ கிராம்
    3. கம்பு                     - 1/4 கிலோ கிராம்
    4. சோளம்               - 1/4 கிலோ கிராம்
    5. பாசிப்பயறு      - 1/4 கிலோ கிராம்
    6. மக்காச்சோளம்       - 100 கிராம்
    7. பொட்டுக்கடலை    - 100 கிராம்
    8. சோயா பீன்ஸ்          - 100 கிராம்
    9. வேர்க்கடலை           - 100 கிராம்
    10. உளுந்து                    - 100 கிராம்
    11. பாதாம்                       - 50 கிராம்
    12. முந்திரி                      - 50 கிராம்
    13. வெள்ளை சுண்டல் - 10 கிராம்
    14. கருப்பு சுண்டல்         - 10 கிராம்
    15. ஏலக்காய்                     - 2 அல்லது 3

    • தேவைப்பட்டால் இதனுடன் சிறுதானிய வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
    • இவற்றையெல்லாம் மிதமான தீயில் வறுத்து, நன்கு ஆற வைத்தப் பின்பு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
    • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

    கஞ்சி தயாரிக்கும் முறை:
    • இரண்டு தே.கரண்டி சத்து மாவை எடுத்துக்கொண்டு அதை ஒரு டம்ளரில் தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
    • மற்றொரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு தே.கரண்டி நாட்டுச்சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து காய்ச்சி, அதனை தூசுகள் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.
    • இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து, மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.
    • கெட்டியான நீர்த்த பதத்திற்கு (Semi solid) வந்தபின், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
    • மிதமான வெதுவெதுப்பான சூட்டில் பருகினால் நல்ல சுவையாக இருக்கும்.

    குறிப்பு:
    • குழந்தை பிறந்து 8 மாதத்திற்கு பிறகு இந்த சத்து மாவை கொடுக்க வேண்டும்.

        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."