சளி தொந்தரவு நீக்கும் தூதுவளை பயன்கள், தூதுவளை ரசம் செய்முறை மற்றும் தூதுவளை துவையல்

      கற்பக மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இந்த கொடி வகை தாவரம், ஈரம் நிறைந்த செழிப்பான இடங்களில், வேலிகள் அல்லது மற்ற செடிகளைப் பற்றி படர்ந்து, புதர் போல வளரும் தாவரமாகும். இத்தாவரத்தில், சிறு சிறு வளைந்த முட்கள், கரும்பச்சை நிற இலைகள், ஊதா நிறப் பூக்கள், உருண்டை வடிவத்தில் சிவப்பு நிற பழங்கள் காணப்படும்.


          இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, அளர்க்கம், சிங்கவல்லி என பல பெயர்கள் உள்ளது. இலை, பூ, காய், கனி, வேர் என இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியும் மருத்துவப் பயன்கள் கொண்டது. தூதுவளையைப் பயன்படுத்தும் முன்பே, இதன் முட்களை நீக்க வேண்டியது அவசியமானதாகும். ஏனென்றால் முட்கள் இருக்கும் செடிகள் சற்று நச்சுத் தன்மை கொண்டவையாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட தூதுவளைத் தாவரம்,  ஓர் காய கற்பக மூலிகையாகும்.

தூதுவளைப் பயன்கள்:
  • தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவில் உள்ளதால் எலும்பையும், பற்களையும் வலுப்படுத்தும்.
  • தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி, காலை மற்றும் மாலை என இரு வேளையும் சிறிதளவு தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டுவர, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதுடன், இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுப்பெறும்.
  • தூதுவளையை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டுவர வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தலாம்.
  • தூதுவளை மூளையில் உள்ள செல்களைத் தூண்டி நினைவாற்றல் பெருக உதவுகிறது.
  • சளி, இருமல், இரைப்பு, சுவாச நோய்கள் நீங்க தூதுவளை நல்ல மருந்தாகும்.
  • தூதுவளை பொடியயை மோரில் கலந்து சாப்பிட , இரத்த சோகை நீங்கி, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகமாகும்.
  • தூதுவளை பொடியயை பாலில் கலந்து சாப்பிட, பித்தத்தால் ஏற்படும் தலைவலி, மயக்கம் போன்றவைக்கு தீர்வு காணலாம்.
தூதுவளை ரசம்:
      சளி,  இருமல் நீங்க தூதுவளை ரசம் நல்ல மருந்தாகும்.

தேவையானப் பொருட்கள்:
  • தூதுவளை  - 30 இலைகள்
  • மிளகு    - 1 தேக்கரண்டி
  • சீரகம்    -  1 தேக்கரண்டி
  • பூண்டு - 5 பல்கள்
  • மிளகாய் வற்றல்   - 3
  • கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
  • கறிவேப்பிலை  - ஒரு கொத்து 
  • புளி    - பெரிய நெல்லிக்காய் அளவு
  • தக்காளி  - 1(தேவைப்பட்டால்)
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்   - சிறிதளவு
  • பெருங்காயம்  - சிறிதளவு      
தூதுவளை ரசம் செய்முறை:
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு, பூண்டு, தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும், பின் இதனை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தூதுவளை விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
  • ரசம் கொதித்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.


தூதுவளை துவையல்:
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கொத்தமல்லி, உளுந்து, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
  • பின் நன்கு சுத்தம் செய்த தூதுளை இலைகள் சேர்த்து வதக்கவும்.
  • இதனை அரைத்து சூடான சாதத்துடன், தூதுவளை துவையல் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிலாம்.

தூதுவளையைப் பயன்படுத்தி தோசை, அடை தோசை செய்யலாம்.


     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment