சளி, இருமல் போக்கும் தூதுவளை ரசம்

 

   கற்பக மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இந்த கொடி வகை தாவரம், ஈரம் நிறைந்த செழிப்பான இடங்களில், வேலிகள் அல்லது மற்ற செடிகளைப் பற்றி படர்ந்து, புதர் போல வளரும் தாவரமாகும். இத்தாவரத்தில், சிறு சிறு வளைந்த முட்கள், கரும்பச்சை நிற இலைகள், ஊதா நிறப் பூக்கள், உருண்டை வடிவத்தில் சிவப்பு நிற பழங்கள் காணப்படும்.


தூதுவளை ரசம்:

      சளி,  இருமல் நீங்க தூதுவளை ரசம் நல்ல மருந்தாகும்.

தேவையானப் பொருட்கள்:
  • தூதுவளை  - 30 இலைகள்
  • மிளகு    - 1 தேக்கரண்டி
  • சீரகம்    -  1 தேக்கரண்டி
  • பூண்டு - 5 பல்கள்
  • மிளகாய் வற்றல்   - 3
  • கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
  • கறிவேப்பிலை  - ஒரு கொத்து 
  • புளி    - பெரிய நெல்லிக்காய் அளவு
  • தக்காளி  - 1(தேவைப்பட்டால்)
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்   - சிறிதளவு
  • பெருங்காயம்  - சிறிதளவு      
தூதுவளை ரசம் செய்முறை:
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு, பூண்டு, தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும், பின் இதனை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தூதுவளை விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
  • ரசம் கொதித்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.



     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment