பிரண்டை, வெப்பமான பகுதிகளில், மனித நடமாட்டம் குறைவாக காணப்படும் காடுகளில் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய கொடி வகையை சார்ந்த தாவரமாகும்.
இந்தியா மற்றும் இலங்கையில் அதிகளவில் காணப்படும் மருத்துவ குணமிகுந்த மூலிகை தாவரம். பிரண்டைக்கு 'வஜ்ஜிரவல்லி' என்ற பெயரும் உண்டு. பிரண்டை என்னும் கொடி வகை தாவரம் பல வகைகளில் வளரக்கூடியதாகும். அதாவது சாதாரணப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, தட்டைப்பிரண்டை (சதுரப்பிரண்டை), முப்பிரண்டை, சிவப்பு பிரண்டை, தீம்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைகளில் வளரக்கூடியது. பிரண்டை பல வகைகளில் காணப்பட்டாலும், நான்கு பட்டைகளை உடைய சாதாரணப் பிரண்டையே பெரும்பாலும் கிடைக்கிறது.
பிரண்டையின் சாறு நம் உடலில்பட்டால் அரிப்பையும், நமைச்சலையும் ஏற்படுத்தக்கூடியது. இதன் சாறு, உலகத்தில் கடினமானப் பொருள் என்று கருதப்படும் வைரத்தின் கார்பன் பிணைப்பையும் துகளாக்கும் என்று அன்றே சித்தர் பெருமான் "போகர்" கூறியுள்ளார்.
பெரும்பாலும் பிரண்டையின் தண்டு பகுதி மற்றும் வேர் பகுதிகளே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
பிரண்டையில் கால்சியம், வைட்டமின் 'சி' போன்ற சத்துக்கள் மிகுதியாக உள்ளன.
பிரண்டையின் நன்மைகள்:
- பிரண்டையில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், எலும்பு முறிவு; மூட்டுவலி; மூட்டு வீக்கம்; சுளுக்கு போன்ற எலும்பு மற்றும் நரம்பு தொடர்பானப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண நாம் நம் அன்றாட உணவுப் பழக்கவழக்கத்தில் பிரண்டையை சேர்த்துக்கொள்ளலாம்.
- பற்களை பலப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை நிறுத்த பிரண்டை உதவுகிறது.
- முதுகுவலி, கழுத்துவலியினால் சிரமப்படுபவர்கள் பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ளாம்.
- மூலநோய்; மலத்துடன் இரத்தம் கசிதல்; மலத்துவாரத்தில் அரிப்பு; அஜீரணக் கோளாறு ஆகியவற்றிலிருந்து குணமடைய, பிரண்டையை சுத்தம் செய்து, நெய்விட்டு வதக்கி, அரைத்து, காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால் நல்லப் பலன் காணலாம்.
- இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதினால், இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தைப் பலப்படுத்த பிரண்டை துணைப்புரிகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள்; கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு பிரண்டை ஒரு நல்மருந்து.
- பிரண்டை, வயிற்றுப் பொருமலை நீக்கி; பசியைத் தூண்டக்கூடியது.
- பிரண்டை - 1 கட்டு
- உளுந்து பருப்பு - 1 மேஜைக் கரண்டி
- கடலைப் பருப்பு - 1 மேஜைக் கரண்டி
- மிளகாய் வற்றல் - 3 (காரத்திற்கேற்ப)
- சின்ன வெங்காயம் - 7
- பூண்டு - 3 பல்கள்
- புளி - சிறிதளவு
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
- உப்பு
- நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
- பிரண்டையை தோல் நீக்கி; நார் அகற்றி; சுத்தம் செய்து; சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். (பிரண்டையின் சாறு அரிப்பையும், நமைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், சுத்தம் செய்யும்முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்).
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, புளி, பிரண்டை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- சூடாறியபின் இவற்றை அரைத்து, தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
- சூடான சாதத்துடன், நெய் மற்றும் பிரண்டை துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment