தேவையானப் பொருட்கள்:
- வெள்ளை அல்லது கறுப்பு உளுந்து -1கப்
- வெல்லம் - 3/4 கப்
- ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
- தேங்காய்ப் பால் - 1/2 கப்
- தேங்காய்தத் துருவல் - 1/4 கப்
செய்முறை:
- உளுந்தை நன்றாக நீரில் சுத்தம் செய்து, நீருற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊற வைத்த உளுந்தை நன்கு மைப் போல அரைத்து, அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி, மிதமானத் தீயில் காய்ச்சவும்.( சிறிதளவு குடிநீர் அல்லது உளுந்து ஊற வைத்த நீர் சேர்த்துக்கொள்ளவும்).
- உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை இடைவிடாமல் கிளற வேண்டும்.
- பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும்.
- ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும்.
- இறுதியாக தேங்காய்தத் துருவல் சேர்க்க வேண்டும்.
- இப்போது சூடான, சுவையான, ஆரோக்கியமான உளுந்து கஞ்சி தயார்.
- அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment