உளுந்து கஞ்சி செய்முறை


தேவையானப் பொருட்கள்:
  • வெள்ளை அல்லது கறுப்பு உளுந்து -1கப்
  • வெல்லம்     - 3/4 கப்
  • ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
  • தேங்காய்ப் பால்   - 1/2 கப்
  • தேங்காய்தத் துருவல் - 1/4 கப்
செய்முறை:
  • உளுந்தை நன்றாக நீரில் சுத்தம் செய்து, நீருற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த உளுந்தை நன்கு மைப் போல அரைத்து,  அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி, மிதமானத் தீயில் காய்ச்சவும்.( சிறிதளவு குடிநீர் அல்லது உளுந்து ஊற வைத்த நீர் சேர்த்துக்கொள்ளவும்).
  • உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை இடைவிடாமல் கிளற வேண்டும்.
  • பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். 
  • ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக தேங்காய்தத் துருவல் சேர்க்க வேண்டும்.
  • இப்போது சூடான,  சுவையான,  ஆரோக்கியமான உளுந்து கஞ்சி தயார்.
  • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.



     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment