மணத்தக்காளி கீரைக் கடையல் செய்யலாமா???

 



தேவையானப் பொருள்கள்:

  • மணத்தக்காளி கீரை  - 1 கட்டு
  • துவரம் பருப்பு    -  100 கிராம்
  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு -- 10 பல்கள்
  • சீரகம்  - 1 மேஜைக்கரண்டி
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கேற்ப)
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • விளக்கெண்ணெய் - சிறிதளவு
  • தேவையான அளவு உப்பு




தாளிக்கத் தேவையானப் பொருள்கள்:
  • நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • நெய் - தேவைப்பட்டால்
  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • மிளகாய் வற்றல் - 2
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு

-----> மணத்தக்காளி கீரை இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அவற்றை நீரில் நன்றாக சுத்தம் செய்துக்கொள்ளவும்.


செய்முறை:
  • ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, துவரம் பருப்பை சுத்தம் செய்து சேர்க்கவும்.





  • அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய், தக்காளி, சிறிதளவு விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
  • மற்றொருப் பாத்திரத்தில் அல்லது ஒரு மண் பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதனுடன் மணத்தக்காளி கீரையை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • கீரை வதங்கியதும் வேக வைத்த துவரம் பருப்பு கலவையை சேர்த்து, மத்து வைத்து நன்கு கடையவும்.



  • அடுத்து தாளிக்க தேவையானப் பொருள்கள் கொண்டுத் தாளிக்கவும்.
  • இப்போது சூடான சுவையான சத்தான மணத்தக்காளி கீரைக் கடையல் தயார்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்ளவும்.

"நலமுடன் வாழ்வோம்;  
தமிழ் போல் வளர்வோம்."


No comments:

Post a Comment