தேவையானப் பொருள்கள்:
- மணத்தக்காளி கீரை - 1 கட்டு
- துவரம் பருப்பு - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு -- 10 பல்கள்
- சீரகம் - 1 மேஜைக்கரண்டி
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கேற்ப)
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- விளக்கெண்ணெய் - சிறிதளவு
- தேவையான அளவு உப்பு
தாளிக்கத் தேவையானப் பொருள்கள்:
- நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- நெய் - தேவைப்பட்டால்
- கடுகு - சிறிதளவு
- சீரகம் - சிறிதளவு
- மிளகாய் வற்றல் - 2
- பெருங்காயம் - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
-----> மணத்தக்காளி கீரை இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அவற்றை நீரில் நன்றாக சுத்தம் செய்துக்கொள்ளவும்.
செய்முறை:
- ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, துவரம் பருப்பை சுத்தம் செய்து சேர்க்கவும்.
- அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய், தக்காளி, சிறிதளவு விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
- மற்றொருப் பாத்திரத்தில் அல்லது ஒரு மண் பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதனுடன் மணத்தக்காளி கீரையை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- கீரை வதங்கியதும் வேக வைத்த துவரம் பருப்பு கலவையை சேர்த்து, மத்து வைத்து நன்கு கடையவும்.
- அடுத்து தாளிக்க தேவையானப் பொருள்கள் கொண்டுத் தாளிக்கவும்.
- இப்போது சூடான சுவையான சத்தான மணத்தக்காளி கீரைக் கடையல் தயார்.
- தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்ளவும்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment