செம்பருத்திப் பூவின் பயன்கள் மற்றும் தேநீர்(Tea)

           செம்பருத்தி, அதிகளவில் மருத்துவ குணங்கள்  நிறைந்த ஒரு அதிசய குறுந்தாவரம் ஆகும். 

ஓரிதழ் செம்பருத்திப் பூ


மருத்துவப் பயன்கள்:
  • செம்பருத்திப் பூ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
  • உயர் இரத்தழுத்தத்தை (High BP) குறைக்கிறது.
  • இரத்தத்தை சுத்திகரித்து, தேவையற்ற கழிவுகளை  வெளியேற்ற துணைபுரிகிறது.
  • வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் உள்ளவர்கள் , தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  • பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பானப் பிரச்சனைகளில் தீர்வுக் காண, செம்பருத்திப் பூ ஒரு சிறந்த மருந்தாகும்.
  • செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து, மோரில் கலந்துக் குடித்துவர, கருப்பை தொடர்பான நோய்கள் குணமாகும். 
  • செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி, காய வைத்து பொடி செய்து, கசாயமாகவோ அல்லது தேநீராகவோ குடித்துவர மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, அதிக இரத்தப்போக்கு போன்ற உபாதைகள் குறையும்.
    காய்ந்த செம்பருத்திப் பூக்கள் 

  • தலைமுடி அடர்த்தியாக வளரவும், பொடுகு,  தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.
செம்பருத்திப் பூ தேநீர்:
  • செம்பருத்திப் பூவில் மகரந்தம் மற்றும் காம்பு பகுதியை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
செம்பருத்திப் பூக்கள் 

  • ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிதளவு நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி மற்றும் சிறிதளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து  கொதிக்கவிட வேண்டும்.

  • பூவின் இதழ்களை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தலாம்.
செம்பருத்திப் பூ தேநீர்

  • தேவைப்பட்டால்  சிறிதளவு எலுமிச்சை  சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
  • தொடர்ந்து செம்பருத்திப் பூ தேநீரை  எடுத்துக்கொண்டால், நல்லப் பலனைக் காணலாம்.
குறிப்பு:
  • 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.
  • கர்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் ஊட்டும் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."


No comments:

Post a Comment