சளி, இருமல் போக்கும் கற்பூரவள்ளி இலை பயன்கள் மற்றும் கற்பூரவள்ளி இலை தேநீர்

         கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட, புதராக வளரக் கூடிய தாவரமாகும். இதன் இலைகள் தடிமனாகவும், மெது மெதுப்பாகவும் இருக்கும். கற்பூரவள்ளி இலைகள் கசப்பு சுவையும், காரதன்மையும், வாசனையும் கொண்ட ஒரு மூலிகை செடியாகும். பெரும்பாலும் வீடுகளில் இச்செடி வளர்க்கப்படுகிறது.


      கற்பூரவள்ளி இலையில் கற்பூரவள்ளி வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் கால்சியம்,  மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுச்சத்துக்களும், ஒமேகா-6 (omega-6 fatty acids)போன்றவையும் அடங்கியுள்ளன.
        
கற்பூரவள்ளி இலையின் பயன்கள்:
  • கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி, சாறெடுத்து, சிறிதளவு தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்துவர சளி, இருமல், மழைக்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் போன்றவை குணமாகும்.
  • கற்பூரவள்ளி இலைச் சாறு காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
  • கற்பூரவள்ளி இலைகளை கழுவி, குடிநீரில் போட்டு, கொதிக்கவிடவும், சாறு நன்றாக இறங்கியவுடன் வடிகட்டி, வெது வெதுப்பான சூட்டில் இந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்துவர நெஞ்சுசளி, இருமல் குணமாகும்.
  • கற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவது நல்லது.
  • இரத்தில் உள்ள கொழுப்பு சத்து அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
  • குழந்தைகளுக்கு அஜீரணத்தால் ஏற்படும் வாந்தி, செரிமானமின்மை போக்க, கற்பூரவள்ளி இலைகளை சாறெடுத்துக் கொடுக்கலாம்.
  • 5 மில்லி லிட்டர் அளவு கற்பூரவள்ளி இலைகளை சாறெடுத்துக் கொடுத்துவர குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் நீங்கும்.
  • நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழல் அடைப்பு நீங்க, கற்பூரவள்ளி இலைகளை நிழலில் உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து, 100மிலி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கற்பூரவள்ளி இலைப் பொடியை சேர்த்து கொதிக்க வைத்து 50மிலி அளவு சுண்ட காய்ச்சி, சிறிதளவு பனங்கருப்பட்டி கலந்து அருந்தலாம்.


கற்பூரவள்ளி இலை தேநீர்:
  •  கற்பூரவள்ளி இலையுடன், துளசி, தூதுவளை, வல்லாரை, சுக்கு, மிளகு  போன்றவற்றை சம அளவு எடுத்து காய வைத்து பொடி செய்து,  100மிலி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி இந்தப் பொடியை சேர்த்து கொதிக்க வைத்து 50மிலி அளவு சுண்ட காய்ச்சி, சிறிதளவு பனங்கருப்பட்டி கலந்து, தேநீராக தயாரித்து அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."
  

No comments:

Post a Comment